ஆந்திர மாநிலத்தின் அரக்கு மக்களவை தொகுதியின் (பழங்குடி) “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.அப்பல நரசா களமிறங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வியாழனன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணிக் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.